பெய்ஜிங்,ஏப்.13- இந்தியாவின் முன்னணி வீட்டுவசதிக் கடன் நிறுவனமான எச்டிஎஃப்சி நிறுவனத்தின் 1.75 கோடிப் பங்குகளை, சீன மக்கள் வங்கி வாங்கியிருக்கிறது. இது எச்டிஎஃப்சி நிறுவனத்தின் 1.01 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரியில் இருந்த நிலையைவிட, எச்டிஎஃப்சி நிறுவனத்தின் பங்குகள் 41 சதவீதம்வரை விலை குறைந்துள்ள நிலையில், ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தப் பங்குகளை சீன மக்கள் வங்கி வாங்கியுள்ளது. எச்டிஎஃப்சி நிறுவனத்தின் 4.21 சதவீதப் பங்குகளை வைத்திருந்த எல்ஐசி நிறுவனம் ஏற்கெனவே மேலும் பங்குகளை வாங்கி, கையிருப்பை 4.67 சதவீதமாக உயர்த்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.